திண்டிவனம் அருகே விஷத்தேனீ கொட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பாம்பூண்டி கிராமத்தில் ஏராளமான
பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அதன்படி நேற்று காலை பாம்பூண்டு ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத
விதமாக அங்கு இருந்த வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு பணிபுரிந்து வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட துவங்கியது.இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறி மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதிப்பட்டனர்.
—-ரெ.வீரம்மாதேவி







