’தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி வேலு நாச்சியார்’ – தவெக தலைவர் விஜய் புகழாரம்…!

விடுதலை வீரர் வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்திய விடுதலை போராட்ட வீரரான வேலு நாச்சியரின் 296 அவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்  தவெக  தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி. சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்.

எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.