சைவ உணவு – சிசிடிவி – புகார் பெட்டி – இலவச கழிப்பிடம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழியில் உணவகத்தில் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழியில் உணவகத்தில் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது. அதன்படி, முக்கிய வழிகாட்டுதல்களில் சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்றும், உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும், கழிப்பிட வசதி இலவசமாகவும் அவற்றோடு உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், பயோ-கழிவறை இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகம் அமைந்துள்ள இடம் பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படியாக இருக்க வேண்டும். உணவகத்திற்கு மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும் எனவும், உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலின் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது. மேலும், உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் இருக்க வேண்டும் எனவும், MRP விலையை விட அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, அவர்கள் புண்படும் வகையிலான செயல்களோ ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் எனவும் பயணிகளால் வாங்கப்படும் உணவு மற்றும் இதர பொருட்கள் வாங்கும் போது கணினி மூலம் அவர்களுக்கு ரசீது தர வேண்டும் எனவும், உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்ட புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும்
என நிபந்தனைகளை விதித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

– பரசுராமன்.ப, மாணவ ஊடகவியலாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.