தற்போது, இந்தியாவில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகை மற்றும் குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் ஏதும் இல்லை என மத்திய வீட்டு வசதி மற்றும் நாகர்ப்புற துறை இணை அமைச்சர் ஹவுசில் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குடிசைப் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய அரசு கவனித்து வருகிறதா என்றும் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததுப் பற்றி மக்களவை உறுப்பினர்கள் சிலர் எழுத்துப் பூர்வமாக கேள்வியெழுப்பி இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை இணை அமைச்சர் கவுசில் கிஷோர் பதிலளித்துள்ளார். அதில், 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி 5,23,79,589 பேர் குடிசைப் பகுதிகளில் வசித்த நிலையில், இதன் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில், 6,54,94,604 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 2002 ஆம் ஆண்டில் 51,688 குடிசைப் பகுதிகள் இருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டில் 33,510 குடிசை பகுதிகளாக குறைந்துள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், தற்போது குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் குறித்து விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்