தமிழகம் செய்திகள்

வள்ளியூர் 4 வழிச்சாலையில் விரைவில் மேம்பாலம் – மத்திய அமைச்சர் வி.கே.சிங் உறுதி

வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படும் பகுதியில், விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்காக வள்ளியூர் பகுதிக்கு வருகை தந்த அவரிடம், வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் கேசவனேரி சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படுவதாகவும், அதனை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக

இதனைக் கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங், வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் கேசவனேரி சந்திப்பை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

– ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு

Jayasheeba

கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

Gayathri Venkatesan

கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை

EZHILARASAN D