உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் படகோட்டி மற்றும் 9 பேர் பயணித்துள்ளனர். அப்போது அவர்கள் ரிவர் ஐலேண்ட் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய போது ஆற்றின் நடுவில் படகு வந்தபோது, இரவு 7 மணியளவில் திடீரென சமநிலையை இழந்து படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் படகோட்டி தீரு, போராடி 3 பேரை உயிருடன் மீட்டார். எனினும், மற்றவர்களை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த படகு விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதனர். இதைத்தவிர, பிரிஜ்ராணி என்ற இளம்பெண்ணும் (வயது 25) விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மீட்பு பணியின்போது கனமழை பெய்த நிலையிலும், அனைவருடைய உடலையும் மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.







