ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பேருந்தில், வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் திடீரென தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது ஒருவருக்கு ஒருவர் மீது ஆசிட் வீசி கொண்டனர்.
இதனால் பேருந்தில் பயணித்தவர்கள் மீதும் ஆசிட் தெறித்ததில் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஒட்டக்குடிசல் பேருந்து நிறுத்தம் அருகே, அந்த இளைஞர்களை பிடித்த பயணிகள், திருவண்ணாமலை தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் 2 வடமாநில இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர







