ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா மீண்டும் அதை புறக்கணித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே உக்ரைனுக்கு ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கின. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்ற வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. இந்தியா,சீனா, கியூபா, உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ஐந்து நாடுகள் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.