இந்திய மாணவர்களை உக்ரைன் பிணையாக வைத்திருக்கவில்லை; மத்திய அரசு

இந்திய மாணவர்களை உக்ரைன் பிணையாக வைத்திருக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வழியாக பேசினார். பின்னர்,…

இந்திய மாணவர்களை உக்ரைன் பிணையாக வைத்திருக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வழியாக பேசினார். பின்னர், உக்ரைன்- ரஷ்ய போர் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேசியது குறித்து ரஷ்ய அரசு அறிக்கை வெளியிட்டது. அதில், போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக ரஷ்ய ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சிகளை ரஷ்ய ராணுவம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்திய மாணவர்களை கார்கிவ் பகுதியில் இருந்து குறுகிய பாதை வழியாக ரஷ்ய எல்லைக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடியிடம் புதின் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் கிடைத்த தகவலின் படி உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணையாகவும், மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், இந்தியர்களை ரஷ்ய எல்லைக்கு வர அனுமதிக்கப்படாததால், அனைத்து மாணவர்களின் நிலை உக்ரைனின் கையிலே உள்ளது என்றும் புதின் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா வெளியிட்ட தகவல் தவறானது என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து, இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பிணையாக வைத்திருக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றுவதில் உக்ரைன் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.