பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்ப்பட்டது. இம்மருத்துவமனையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதில் 79 கோடி மதிப்பில் 4 லிப்ட் கொண்டு 400 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை அரங்கம், நவீன இரத்த வங்கி கூடம், பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட கட்டடப் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கட்டிட பணிகளை தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா இன்று கட்டிடங்களை ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலும் வசதிகள் குறித்தும் மற்றும் 400-க்கும் மேறபட்ட படுக்கை வசதி இருக்க வேண்டும் என்றார். மேலும் நவீன வசதியுடன் மருத்துவமனை இருக்க வேண்டும் எனவும், பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் என எராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.