திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு மதுமானக்கடையில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழப்பு. உடல்களை கைப்பற்றி இருவரின் உயிரிழப்புக்கும் மது காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை.
லால்குடி அருகே தச்சங்குறிச்சி மாரியம்மன் கோயில் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்
60 வயதான முனியாண்டி. இவர் வார்டு உறுப்பினராக இருப்பதோடு, கொத்தனார் வேலையும் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான 48 வயது நிரம்பிய சிவக்குமார், முனியாண்டியுடன் சேர்ந்து மது அருந்துவது வாடிக்கை. இன்னிலையில் வழக்கம் போல் இவர்கள் இருவரும் நேற்று மதியம் தச்சங்குறிச்சி அரசு மதுபான
கடையில் மது குடித்துள்ளனர்.
அதன் பின்னர் மாலையில் முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு,
தச்சன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு
அதன் பின்னர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து
வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக இன்று காலை திருச்சி
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகுமார் மது போதையில் உணவு அருந்தாமல் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். மேலும் தொடர்ந்து உணவு அருந்தாமல் மது குடித்து வந்ததாக அவர்கள் உறவினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சிவகுமாரை உணவு அருந்த வீஇட்டில் உள்ளோர் எழுப்பியபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் சிறுகனூர் மற்றும்
கணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு
ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் சுஜித் குமார், ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் உள்ளிட்டோர் விசாரணை
மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு
பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







