பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் 2 வது மாடியில் இருக்கும் கழிவறையில் இன்று பகல் 12.22 மணியளவில் பயங்கர சத்தத் துடன் திடீரென்று குண்டுவெடித்தது. இதையடுத்து அந்த வளாகத்தின் சுவர்கள் இடித்து விழுந்தன. ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. இந்த திடீர் குண்டுவெடிப்பில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீதிமன்ற வளாகத்தில் பதற்ற மான சூழல் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி லூதியானா போலீஸ் கமிஷனர் குர்பிரீத் புல்லார் கூறும்போது, ’நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது அறையில் இருக்கும் ரெக்கார்ட் அறைக்கு அருகில் குண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு மற்றும், தடயவியல் நிபுணர்கள் சண்டிகரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பீதிடைய தேவையில்லை’ என்றார்.
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கூறும்போது, ‘லூதியானாவுக்கு சென்றுகொண்டிருக்கிறேன். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் அரசு விழிப்போடு இருக்கிறது. இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது’ என்றார்.