தூத்துக்குடி சாலை விபத்தில் கழுத்து தண்டுவடத்தில் காயம் அடைந்து கை கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயல்படாமல் இருந்த இளைஞருக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி, சோட்டையின் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மைதீன். கூலி தொழிலாளியான
இவர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் கழுத்து பகுதியில் உள்ள
தண்டுவட எலும்பு உடைந்துள்ளது. இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட மைதீன் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டதுடன் அவரது கை
கால்கள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவர் ராஜா விக்னேஷ்
தலைமையிலான மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது விபத்து
ஏற்பட்ட கழுத்துப் பகுதியில் டாஸ் அல்ட்ரா டைட்டானியம் கூண்டை பொருத்தி
இம்ப்லான்ட் அறுவை சிகிச்சை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் பிசியோதெரபி சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு சில மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே அளிக்கப்படும் இந்த நவீன சிகிச்சையின் மூலம் சாதனை படைத்த தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களை, மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகுமார் பாராட்டினார்.
மைதீனுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ்
இந்த சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக
அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை அளிக்க சுமார் 7
முதல் 8 லட்ச ரூபாய் வரை செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்ரீ.மரகதம்