31.9 C
Chennai
May 30, 2024
செய்திகள் வேலைவாய்ப்பு

பழைய பொருட்களை விலைக்கு வாங்கும் மாநகராட்சி எது ?

பழைய பொருட்களை விலை கொடுத்து விலைக்கு வாங்கும் பணியில் திருச்சி மாநகராட்சி இறங்கியுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர் சுய உதவி குழு மூலம் நேரடியாக வீடு வீடாக சென்று சேகரித்து ஒவ்வொரு கிலோ பழைய பொருட்களுக்கும் 12 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்பட்டு வீட்டில் உரிமையாளர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேவையற்ற பொருட்களை வீடுகளில் சேர்ப்பதால் அதில் தேங்கும் தண்ணீரால் டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. இவற்றை தவிர்க்கவும், பெண்கள் சுய உதவிகளுக்கு உதவும் விதமாகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மேயர் அன்பழகன் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தூய்மையான மாநகராட்சி, திருச்சி மாநகராட்சி என்ற நிலை உருவாகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading