33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள்

மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.எம். சார்பில் புகழஞ்சலி!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.ஐ. (எம்) கட்சி சார்பில் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திரைபிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பூ ராமுவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பூ ராமுவின் புகழஞ்சலிக் கூட்டத்தில் மேடையில் கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய க/பெ.ரணசிங்கம் படத்தின் இயக்குநர் பி.விருமாண்டி பேசுகையில், என் தந்தையும் ராமு அண்ணனும் பார்க்க ஒரேமாதிரி இருப்பார்கள்.
நான் எடுத்த க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதிக்கு தந்தையாக என் தந்தையை
நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் அவர் இறந்துவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் பார்க்க என் தந்தை போல் இருந்தார் என இவரை நடிக்க வைத்தேன். அதன் இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தையும் எழுதி இருந்தேன். ஆனால், தற்போது அதை இழந்துவிட்டேன். விக்ரம் பட வசனத்தை அடிக்கடி பயன்படுத்தியவர் ராமு அய்யா தான் எனவும், என் மகன் அவருடன் கிடா படத்தில் அவருக்கு பேரனாக நடித்தான் .ஒரு தாத்தா பேரனை பார்த்துக் கொள்வது போன்று அவ்வளவு பாசமாக பார்த்துக் கொண்டார். அவர் இறந்த செய்தி கேட்டு என் மகன் தாத்தா இறந்து விட்டாரா என்று சொல்லி அழுதான். ஒரு முறை என் கல்யாண நாள் அன்று என்னிடம் பணம் இல்லை என்ற வருத்தத்தில் இருந்தபோது அவர் போன் செய்திருந்தார். என் குரலை கேட்டு என்ன பிரச்சனை என்று கேட்டு உடனே என் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்ப சொல்லி உடனே 10,000 ரூபாய் அனுப்பினார் என கண்ணீருடன் பேசினார்.

பின்னர், மேடையில் பேசிய நடிகர் பிளாக் பாண்டி, எப்பொழுதும் தன்னுடைய உடலை பார்க்க மாற்றார், எளிமையானவர். ஒருவருக்கு உதவி செய்யும் பொழுது அனைவருக்கும் தெரியக் கூடாது என்று நினைப்பவர். ஏன் தெரிய வேண்டும் என்று யோசிக்க கூடியவர். எல்லாருக்கும் தெரிந்து செய்வது உதவி இல்லை யாருக்கும் தெரியக் கூடாது என்பார். தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் கொரோனா காலங்களில் பொதுமக்கள் வீட்டுக்குச் சென்று மருந்து வழங்கியவர்.
அடுத்த நொடி பற்றி யோசிக்காத ஒரு மனிதர், சக உறவுகளுக்கு எந்த அளவுக்கு
உதவியாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். எந்த அளவு எளிமையாக இருக்க வேண்டும். சக உறவுகளுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு தகப்பன் மகன் உறவு என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்னைத் திட்டும் போது என் தந்தை திட்டுவது போல் உரிமையாக இருக்கும்.

உதவும் மனிதம் சார்பில், பலருக்கு உதவும்போது ராமு அவர்களும் என்னிடம் அரிசி
வாங்குவார் . ஆனால், அதை அவர் பயன்படுத்தியதில்லை. தேவைப்படுவோருக்கு கொடுப்பார். ஒருவர் இருக்கும்போது அவர் பற்றி பேசுவதைவிட இல்லாதபோதும் பேசுவது தான் அவர் வாழ்ந்ததற்கான அடையாளம். கடைசியில் அவர் படுக்கையில் இருந்தபோது கூட அவரிடம் சினமா பற்றி பேசினேன். அவர் குணமாகி வருவார் என்று பெரிதும் நம்பினேன். அவரது இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார்.

தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், நம்முடைய அன்புக்குரிய தோழர் ராமுவின் மறைவு அதிக வலியை கொடுக்கிறது. பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் ராமு கவலைக்கிடமாக இருப்பதாக பதிவு செய்திருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் . அவர் இறந்த செய்தி வந்த போது நான் கன்னியாகுமரியில் இருந்தேன். அவருக்கு இதற்கு முன் உடல்நிலை குறித்து எந்தப் பிரச்சனையும் இருந்ததாகத் தெரியவில்லை. திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது. ஒவ்வொரு அங்கமாக செயலிழந்து வருகிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இளைஞர் அணியிலிருந்து மாநில நிர்வாகியாக உயர்ந்தவர். சினிமாவில் வந்தால் முத்திரை பதித்துவிட முடிகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேல் களப் பணியில் இருந்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading