சென்னையில் ஆட்கடத்தல்; துப்பாக்கி முனையில் 6 பேர் கைது!

பணம் திருப்பி தராததால், பணம் வாங்கியவரைச் சென்னையில் சொகுசு காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 41-வயதான சரவணனுக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த 41-வயதான ஆரோக்கியராஜ் கடந்த மூன்று மாதங்களுக்கு…

பணம் திருப்பி தராததால், பணம் வாங்கியவரைச் சென்னையில் சொகுசு காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 41-வயதான சரவணனுக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த 41-வயதான ஆரோக்கியராஜ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூபாய் 5 கோடி கொடுத்ததாகவும், இந்த ரூபாய் 5 கோடியை மணல் குவாரி ஏலம் எடுக்கச் சரவணனிடம் ஆரோக்கியராஜ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சரவணனிடம் கொடுத்த ரூபாய் 5 கோடியைத் திருப்பி தராமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ் ஜெயில் வார்டன், ஐடி ஊழியர்கள், நண்பர்கள் என 6 பேர் கொண்ட கும்பலுடன் பார்ச்சுனர் காரில் தியாகராய நகரில் உள்ள சரவணன் வீட்டிற்குச் சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி சரவணனை அவருடைய இரண்டு சொகுசு காரில் கடத்தி சென்றுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘தமிழ் தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியது ஆசிரியர் தேர்வு வாரியம்’

தகவல் அறிந்த போலீசார் வாக்கி டாக்கி மூலம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் அலார்ட் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, பள்ளிகாரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா தலைமையிலான குழுவினர் ஓஎம்ஆர் சாலையில் கடத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களையும், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மாமல்லபுரம் அருகே ஒரு காரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் கடத்தப்பட்டவரையும் கடத்திய ஜெயில் வார்டன், இரு ஐடி ஊழியர்கள், பணம் கொடுத்தவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.