வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதுவரை சுமார் 6 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வருமான வரித்துறை வெளியிட்ட தகவலில், நேற்று மாலை நிலவரப்படி, சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கபப்ட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2022-2023 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம்.
அதன்படி கடந்த வாரம் முழுக்கவே அதிகமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் வருமான வரியைத் தாக்கல் செய்தனர்.
நேற்று மட்டும் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.







