28.9 C
Chennai
May 22, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

TNPSC குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு! – எப்போது தெரியுமா?

குரூப் 1 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் குருப் – 1, 2A, 3, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  அதன்படி துணை ஆட்சியர்,  காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : உணவுகளை வீணடிக்கும் மக்கள்… ஒரே ஆண்டில் 150 கோடி மெட்ரிக் டன்…. – ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதையடுத்து,  தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-I  உள்ளிட்ட,  90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.  இன்று ( மார்ச் – 28 )  முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பிரதான தேர்வை 2,113 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading