தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதற்கு அடுத்த சனி(13), ஞாயிறு (14) கிழமைகள் விடுமுறை பிறகு கடந்த 15-ம் தேதி முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த 12-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியளவில்நிறைவுபொறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இதுவரை 3,997 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 3,332 பேர் ஆண்கள், 664 பேர் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கன்னியாகுமரி இடைத்தேர்தல்
சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தற்போதுவரை 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் விஜய் வசந்த ஆகியோர் முக்கிய வேட்பாளராக உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை தொடங்குகிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற வரும் 22-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.