தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 6) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவுச் செய்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர், திரைப்பிரபலங்கள் தங்களுடைய ஜனநாயக கடமையாற்றி பொதுமக்களுக்கும் வாக்குப்பதிவு செய்ய ஊக்குவித்துவருகிறார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் முத்துசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி மு.பிரேம்சந்தர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.