தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தங்கு தடையில்லா மின்சாரத்தை அரசு வழங்கி வருவதாக எரிசக்தித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் இன்று மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் எரிசக்தித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், நிலக்கரி கிடைக்கப் பெறாததாலும், மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அதிக விலை காரணமாகவும் 2021 ஆகஸ்ட், செப்டம்பர் & அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பெரும் மின் பற்றாக்குறை ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் குறைந்த அளவு மின்சாரத்தை வழங்கி வந்ததுடன், மின் சந்தையிலும் மின் கொள்முதல் விலையானது மிகவும் அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும், அனைத்து நுகர்வோர்களுக்கும், நம்பகமான மின்சாரத்தை வழங்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தங்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எரிசக்தித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.