திகார் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்படும் மோதலை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே, சிறப்பு தடி மற்றும் மின்சார அதிர்ச்சி சாதனங்களை சிறை நிர்வாகம் வாங்கி வருகிறது.
உலகளவில் சிறைகளில் அதிகாரிகள் பயன்படுத்தும் ஆயுதங்களில், மின்சார அதிர்ச்சி துப்பாக்கிகள் சிறைக் கைதிகளை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக உள்ளதாக கூறப்படுகிறது. முரட்டுத்தனமான கைதிகளை லேசான மின்சார அதிர்ச்சியை பயன்படுத்தி சிறிது நேரம் அசையவிடாமல் முடக்க இந்த துப்பாக்கிகளை சிறைத்துறையினர் பயன்படுத்துகின்றனர். வெறித்தனமாக ஓடும் கும்பலைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே மற்றும் சிறப்பு தடிகளையும் சிறைச்சாலைகளில் பயன்படுத்துவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதுபோல டெல்லி திகார் சிறையில், சிறைக் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களின் போது, சில நேரங்களில் உயிர் பலிகள் நேரிடுகின்றன. இதனைத் தடுக்கவே, திகார் சிறைத் துறை நிர்வாகம் பெப்பர் ஸ்பிரே, பிரத்யேகமான கைத்தடி, மற்றும் மின்சார ஷாக் கொடுக்கும் துப்பாக்கி போன்றவற்றை வாங்குகிறது.
இதுகுறித்து பேசிய சிறைத்துறை அதிகாரிகள், ”கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆயுதங்கள் வாங்குவது குறித்து பரிந்துரை அனுப்பப்பட்டது. பொருட்களை வாங்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முதற்கட்டமாக 3 சிறை வளாகங்களுக்கும் சேர்த்து, 80 மின்சார அதிர்ச்சி துப்பாக்கிகள், 160 பாதுகாப்பு உபகரணங்கள், 80 பெப்பர் ஸ்பிரேக்கள் மற்றும் 160 டி-வகை கைத்தடிகள் வாங்கப்பட்டது” என்று கூறினர்.