ஒரே நேரத்தில் மூன்று படங்கள்; கலக்கும் ‘பிரகாஷ் ராஜ்’

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிசியாகி இருந்த பிரகாஷ் ராஜ் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அசுரன் படத்தில் வழக்கறிஞராக நடித்து அசத்திய பிரகாஷ்…

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிசியாகி இருந்த பிரகாஷ் ராஜ் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அசுரன் படத்தில் வழக்கறிஞராக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ், தீபாவளிக்கு வெளியாகும் 3 படங்களில் நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளியையொட்டி நேற்று வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அதேபோல, சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’ படத்திலும், விஷாலின் ‘எனிமி’ படத்திலும் நடித்துள்ளார் .

‘அண்ணாத்த’, ‘எனிமி’ நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு மூன்று படங்கள் வெளியாவதால், பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.