வெற்றி, தோல்விகளை கண்டு மனதை மாற்றி கொள்ள மாட்டேன். ஒழுக்கம் என்பது மிக முக்கியம் என பி.வி.சிந்து மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
திருச்சி தாயனூர் அருகே உள்ள கேர் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் “Meet The
Champion” என்கிற தலைப்பில் நடைபெற்ற விழாவில் பத்ம பூஷன் பேட்மிட்டன்
வீராங்கனை பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் பேட்மிட்டன் வீராங்கனை பத்ம பூசன் பிவி சிந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உங்களது குழந்தைகள் விரும்பும் விளையாட்டை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பெற்றோர்கள் உங்களது குழந்தைகள் எதில் ஆர்வமாக உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உந்துதலை தர வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இயல்பு. சிலர் சின்ன வயதில் வெற்றி பெறுவார்கள்,
ஆனால் அது முக்கியமல்ல, வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். நிறைய நேரங்களில் நான் தோல்வி அடைந்த போதும் எனது பெற்றோர்கள் எனக்கு தட்டிக்
கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். படிப்படியாக தான் முன்னேறினேன். விருதுகள், சான்றிதழ்கள் எல்லாம் படிப்படியாக தான் கிடைத்தது. இங்கு எண்ணற்ற சாதனையாளர்கள் இருக்கலாம். எண்ணற்ற பி.வி. சிந்துக்கள் இருக்கலாம் அவர்களை கண்டறிந்து வெளி கொண்டு வரும் முக்கிய பொறுப்பு கண்டிப்பாக ஆசிரியர்களுக்கு உண்டு.
நாள்தோறும் 27 கிலோ மீட்டர் பயிற்சிக்காக நான் பயணித்து வீடு திரும்புவேன். நான் என் மனதில் எண்ணி கொண்டதெல்லாம் அவர்கள் தங்க பதக்கத்தை வெல்லும் போது
நம்மால் ஏன் முடியாது என்று மட்டுமே. 3 மாதம் போன்களை பயன்படுத்தாமல் இருந்தேன். 3 மாத காலம் எந்த ஒரு துரித உணவுகளையும் சாப்பிடாமல் இருந்தேன்.
இந்தியாவிற்காக மேடையில் நிற்கும் போது எப்போதும் மகிழ்ச்சி அடைவேன். சில்வர்
சிந்து என்று எனக்கு பலர் பெயரே வைத்து விட்டார்கள். ஆனால் நான் தங்க பதக்கத்தை வெல்வது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். 7 முறை தோற்ற பின்னர் டிசம்பரில் மீண்டும் வெற்றி பெற்றேன். சேம்பியன்ஷிப் வென்றேன். என்னுடைய வாழ்வில் நான் கற்று கொண்டது தோல்விகளின் போது நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே முக்கியம்.
தங்க பதக்கம் வென்ற போது கடந்து வந்த பாதை எல்லாம் இல்லை. ஆனால் என்னுடைய வாழ்வில் உண்மையில் எண்ணற்ற கடினமான சூழலை சந்தித்தேன். கல்வியும், விளையாட்டும் இரண்டுமே முக்கியம் தான். விளையாட்டை விரும்பும் போது கல்வி பெரிதல்ல என்று கூறுவது தவறு. கல்வி உங்களை மீண்டும் புத்துணர்வாக மாற்ற உதவும். கல்வியும் முக்கியம் என்பதை விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள குழந்தைகள் மறந்து விடக்கூடாது. யோகா போன்ற பயிற்சிகளை கண்டிப்பாக மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பி.வி. சிந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கேள்வி: உங்களுடைய இன்ஸ்பரேசன் யார்?
என்னுடைய இனஸ்பைரேசன் பேட்மிட்டன் வீரர் லிண்டன்- முதலில் சிறுவயதில் எனக்கு
டாக்டராக வேண்டும் என்கிற கனவுதான் இருந்தது – பின்னர் தான் பேட்மிட்டன் மீது
ஆர்வம் வந்தது.
கேள்வி: கடினமான நேரத்தில் எப்படி மனதை திடப்படுத்துவீர்கள்?
களத்தில் சிரமமான நேரங்களில் இந்த அளவிற்கு நாம் வளர எவ்வளவு சிரமம் அடைந்தோம், எவ்வளவு பயிற்சி,எவ்வளவு கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டேன் என்பதை தான் என்றும் எண்ணுவேன். வெற்றி, தோல்விகளை கண்டு மனதை மாற்றி கொள்ள மாட்டேன். ஒழுக்கம் என்பது மிக முக்கியம். அதே போல் இலக்கு என்பதும் மிக மிக முக்கியம்.
கேள்வி: உங்கள் வாழ்வில் அரசியல்களை கடந்து வந்தீர்களா ?
அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும். நீங்கள் நம்பர் 1ல் இருக்கும்
போது உங்களை நீங்கள் நீரூபிக்கும் போது யாராலும் உங்களை எதுவும் செய்ய
முடியாது.