திராவிட மாடல் அரசு, உழைக்கும் மக்களுக்கான அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25 ஆம் ஆண்டு பொன்விழா மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 16 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி, கே.என் நேரு சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அடித்தட்டு மக்களுக்கான இயக்கம் என்று கூறினார். மே ஒன்றாம் தேதியை ஊதியத்தோடு கூடிய விடுமுறை தினமாக அறிவித்தது, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க செய்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா!!
திமுக ஆட்சியில் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஜவுளி கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி வைக்க வேண்டும் என சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். திராவிட மாடல் அரசு, உழைக்கும் மக்களுக்கான அரசு என்றும், தொழிலாளர்களின் ஒருவனாக என்றும் இருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.