இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வழிபட்டார். பின்னர்…

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று காமாட்சி அம்மனிடம் வழிபட்டதாக கூறினார்.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால், திமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது எனத் தெரிவித்தார். கடந்த 2006-2011இல் ஆட்சி செய்த திமுக, வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் எச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.