சிவகங்கை அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் ஏழாம் திருநாளில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக கோயில் மண்டபத்தில் உற்சவர் விநாயகர், ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் ஆகியோர் சர்வ அலங்காரத்திலும் ஸ்ரீ முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை தேவியர்களுடன் மனக்கோணத்திலும் எழுந்தருளினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் முருக பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டு வைபவமும், பூணல்அணிவித்தலும், வஸ்திரம் பட்டு சேலை சாத்துதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றது. மேலும் கன்னிகா தானம் பூஜைகள் மற்றும் யாக பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி தெய்வானை தேவி அவர்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாலை மாற்று வைபவம் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
—அனகா காளமேகன்