கோடை காலத்தை முன்னிட்டு திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் பந்தல் திறந்து இயற்கை பானங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இது போன்ற கோடை காலத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல்
திறக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கோடை வெப்பத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், போக்குவரத்து காவல்துறை சார்பில் மெயின் ஆர்ச் பகுதி அருகே நீர்மோர் பந்தல் அமைக்க பட்டது. இதில், திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். அப்பொழுது, மக்களுக்கு உடல் வெப்பத்தை தணிக்க கூடிய இயற்கை பானங்களான மோர் மற்றும் தண்ணீர் பழங்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து சாலையில் வந்த வாகன ஓட்டிகளையும் மறித்து மோர் மற்றும் தண்ணீர்
பழங்களை வழங்கிய அவர் முடிந்த வரை வெப்ப காலங்களில் இருசக்கர வாகனங்கள்
ஓட்டுவதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கினார்.
—ம. ஶ்ரீ மரகதம்