”அநீதி அராஜகம் தில்லுமுல்லு” – வித்தியாசமாக திருக்குறள் கூறி திமுக-வை விமர்சித்த விஜய்……!

தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் வித்தியமாக திருக்குறள் ஒன்றை கூறி திமுகவை விமர்சித்துள்ளார்.

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது ,

தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜூன் மாதம் அளித்த பேட்டி ஒன்றில், பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தேன். அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் அதிமுக என்று கூறினார்.

2017-க்கு பிறகு, 2021-க்கு பிறகு தமிழ்நாட்டு நிலையை யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தனர். இன்றைக்கு இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சி தான் தமிழக வெற்றிக்கழகம்.

1977-ம் ஆண்டு போல பழைய நஞ்சு போன தீஞ்சு போன ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும். ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு”. மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.