விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஆண்டாண்டு காலமாக
காவல்துறையினருக்கு முதல் மரியாதை கொடுத்து, கோயில்
திருவிழா நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே சுமார் 150- ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பல ஆண்டுகளாக தொடர்ந்து காவல் நிலையத்தில் பணிபுரியும் எத்தனை நபர்கள் மாறினாலும் காவலர்களுக்கு, ஊர் மக்கள் சார்பாக மரியாதை வழங்கப்பட்டு தான் வருகிறது. அதனால், காவலர்களால் ஆண்டு தோறும் இக்கோயிலுக்கு சிறப்பு செய்யப்படுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் திருவிழாவிற்கு, காரியாபட்டி காவல்
நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும்
காவலர்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்தோடு ஒன்றிணைந்து
ஒவ்வொருவரும் 1000 முதல் 2000 ரூபாய் வரை வரி செலுத்தினர். கோயிலில்
தங்களது குடும்பத்துடன் பொங்கல் வைத்து திருவிழாவை கொண்டாடினார்கள்.
இந்நிலையில், காவலர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காவல் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்பு அளிப்பதுடன் தங்கள் பணி நிறைவடைந்தது என
இல்லாமல், வரி செலுத்தி முன்னின்று கோயில் திருவிழாவை நடத்தும் காவலர்களின்
செயல்பாடு இப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
-கு. பாலமுருகன்