முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

திடீரென மிரண்டு ஓடிய யானை – சிதறி ஓடிய பக்தர்கள்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக அளவு வனப்பகுதியையும்,  மலைப் பகுதியையும் கொண்ட கேரள மாநிலத்தில் யானைகள் அதிகம் வளர்க்கப்படுவதும்,  அந்த யானைகள் கோயில் திருவிழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் பாலக்காடு அருகே ஷோர்னூர் பகுதியில் உள்ள குறும்பா ஸ்ரீ \பகவதி அம்மன் கோயில் திருவிழாவில்,  சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியின் போது யானை பொதுமக்களுடன் சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில் யானை திடீரென மிரண்டு ஓடியதால்,  அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிதறி ஓடிய நிலையில்,  சிலர் சிறு சிறு காயங்களுடன் தப்பினர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Vandhana

இந்தியாவில் புதிதாக 20,551 பேருக்கு கொரோனா

Web Editor

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading