முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்ற கூட்டம் 19ம் தேதி தொடக்கம்


நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் , மழை கால கூட்டத்தொடர் இரண்டும் முன்கூட்டியே முடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு குளிர் காலக் கூட்டத்தொடர் நடத்தப்படவே இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் இந்த ஆண்டு கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி குடியரசு தலைவர் உரையிடன் தொடங்கியது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் பிப்ரவரி 15ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் , பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான மழைகாலக் கூட்டத்தொடரை வரும் வரும் 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்துவது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை வரும் 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விடுமுறை நாட்கள் தவிர மொத்தம் 19 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram