கன்னியாகுமரி அருகே காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே படுவூரை சேர்ந்தவர்கள் ஆன்சலின் சுரேஷ் மற்றும் கணேஷ்குமார். இவர்கள் மீது மணிகண்டன் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் தாக்குதல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இருவரும் கருங்கல் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், மணிகண்டன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக, ஆன்சலின் மற்றும் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய போவதாக காவல்துறையினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் நிலையம் முன்பாக உள்ள கொடிக்கம்ப கயிற்றில் தூக்கிட்டு இருவரும் உயிரிழப்புக்கு முயன்றுள்ளனர்.
அப்போது அருகிலிருந்த காவல்துறையினர் இருவரையும் காப்பாற்றினர். அதனைத் தொடர்ந்து ஆன்சலின் மீண்டும் உயிரிழப்புக்கு முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.