முக்கியச் செய்திகள் உலகம் Instagram News

குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து  குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு ரியான் ஏர்லைன்ஸ் விமானத்தில் செக்-இன் செய்து கொண்டிருந்தபோது, ​​அவர்கள் குழந்தையை விட்டுச் சென்றதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது, ​​விமான முன்பதிவில் குழந்தைகளைச் சேர்க்க Ryanair ஏர்லைன்ஸ் அனுமதிக்கிறது. வயது வந்தவரின் மடியில் அமர்ந்து குழந்தை பயன் நிறுவனங்கள் $27 வசூலிக்கின்றன. அல்லது பெரியவர்கள் குழந்தை இருக்கையில் பயணம் செய்ய விரும்பினால், தனி ஏற்பாடு செய்யப்பட செய்து தரப்படுகின்றன.

ஆனால் இவை எவற்றையும் இந்த பயணிகள் பின்பற்றவில்லை. விமானத்திற்கான செக்-இன் மூடப்பட்டவுடன் தம்பதியினர் விமானத்திற்குத் தாமதமாக வந்துள்ளனர். மேலும், குழந்தைக்கான டிக்கெட்டை எடுக்க மறுத்ததுடன், தம்பதியினர் குழந்தையை விட்டுவிட்டு விமானத்திற்கான போர்டிங் கேட்டை அடையும் முன்பே செக்-இன் கவுண்டரிலிருந்த அதிகாரி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்ததால் சோதனை சாவடியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

பின் இஸ்ரேல் காவல்துறையால் விசாரணை நத்தப்பட்டு பின் பெற்றோரிடம் குழந்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உழைக்கும் கைகளே… உருவாக்கும் கைகளே: தொழிலாளர் தின வரலாறு

EZHILARASAN D

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு; மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!

Halley Karthik

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு

G SaravanaKumar