திராவிட மாடல் என்ற சொல்லுடன் அரசு தயாரித்த ஆளுநர் உரை சட்டப்பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்தார்.தமிழக அரசால் அச்சடிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆளுநர் உரையாற்றியது வருத்தமளிப்பதாக கூறினார். மேலும், உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்திருந்தார்.
எனவே, ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும், இணைத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது
இதையடுத்து, உடனடியாக அரசு தயாரித்த ஆளுநர் உரையை ஆங்கிலம் மற்றும் தமிழ் உரையை சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அச்சடிக்கப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகளை நீக்கி ஆளுநர் உரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்கா உள்ளிட்ட அச்சிடப்பட்ட அனைத்தும் அடங்கிய ஆளுநரின் உரை இணையத்தில் பதிவேற்றப்பட்டது.