இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பார்டர் காவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: ‘நாட்டு நாட்டு’ இந்திய மக்களின் பாடல்; நடிகர் ராம் சரண்
இதையடுத்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
ஏற்கனவே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் இந்திய அணியை வெல்ல வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் களமிறங்கும். அதேபோல் இந்திய அணியும் இந்த ஒரு நாள் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும். எனவே இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.