முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் INDIA கூட்டணிக்கும் 100 தொகுதிகளில் 1000 வாக்குகளே வித்தியாசம்!

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் INDIA கூட்டணிக்கும் 100 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசமே இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி நண்பகல் 12.50 மணி நிலவரப்படி  பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் INDIA கூட்டணி கட்சிகள் 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் முடிவுகள் : கர்நாடகாவில் காங்கிரஸ் பின்னடைவு!

இந்நிலையில்,  INDIA கூட்டணி வேட்பாளர்களும் குறைவான வாக்குகள் வித்தியாத்திலேயே பின்னடைவில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 288 தொகுதிகளிலும் காங்கிரஸின் INDIA  கூட்டணி 237 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

மேலும், 100 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் INDIA கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையே 1000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்புகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

”புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது” – தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

Web Editor

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

EZHILARASAN D

“மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading