32.2 C
Chennai
September 25, 2023
ஆசிரியர் தேர்வு இந்தியா

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

72வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டை நாம் கற்றுக்கொள்ளும் ஆண்டாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். உலக நாடுகளின் பேராதரவுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நுழைந்துள்ளதாக குறிப்பிட்ட ராம்நாத் கோவிந்த், சுயசார்பு இந்தியா திட்டத்தால் நாடு வளர்ச்சிப்பாதையில் விரைவாக முன்னேறி செல்லும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மிகக்குறுகிய காலத்திலேயே கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் புகழ்ந்துரைத்தார்.

அண்மையில் வேளாண் மற்றும் தொழிலாளர் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் தொடர்பாக சில அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஆகஸ்ட் 16ம் தேதி முதலமைச்சர் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல்!

Arivazhagan Chinnasamy

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து – ம.பி.காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவிப்பு.!

Web Editor

இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்

Arivazhagan Chinnasamy

Leave a Reply