28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருகிற பங்கஜ் மித்தல் (ராஜஸ்தான்), சஞ்சய் கரோல் (பாட்னா), சஞ்சய் குமார் (மணிப்பூர்) மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அசனுதீன் அமானுல்லா (பாட்னா), மனோஜ் மிஸ்ரா (அலகாபாத்) ஆகிய 5 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.தொடர்ந்து, கடந்த மாதம் 31ம் தேதியன்று, அலகாபாத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலையும், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். புதிய நீதிபதிகள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளனர். அவர்கள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading