செங்கம் அருகே குழந்தை வரம் வேண்டி கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கையால் வடையை எடுத்து நூதன முறையில் வழிபாடு நடைபெற்றது.
நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பல முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. அதில் பழனி முருகன் கோயில், வடலூர் வல்லலார் ஜோதி தரிசம், மைலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயில், தோரணமலை முருகன் கோயில் திருக்கல்யாண உற்சவம், பாலசுப்பிரமணியர் கோயில் என பல முக்கிய இடங்களில் தைப்பூசத் திருவிழா கோலாகளமாக நடைப்பெற்றது. மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடி பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அலகு குத்துதல், செக்கு இழுத்தல், தேர் இழுத்தல், அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுதல் போன்ற நேரத்திக் கடன்களை செலுத்தினர்.
அப்போது, உச்சகட்டமாக குழந்தை வரம் வேண்டி கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு அதனை வெறும் கைகளால் எடுத்தனர். இந்த வடையை உண்பதால் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
மேலும், 5 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் இன்று திறக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.