பொன்னமராவதி அருகே கோவனூரில் உள்ள மேக்கினிக்காடன் கோயில்வீடு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோவனூரில் அமைந்துள்ள மேக்கினிக்காடன் கோயில்வீடு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய குடமுழுக்கு விழாவில், தொடர்ந்து வாஸ்து சாந்தி,விக்னேஷ்வர பூஜை, லெட்சுமி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் உட்பட மூன்று கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
பல்வேறு புனிதத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பல்வேறு கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்களால் பூஜிக்கப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை, மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்து, கோயில் விமானத்தை அடைந்தனர். கருடபகவான் கோயிலை சுற்றிவர, பரிவார தெய்வங்களான சின்ன கருப்பர்,பெரியகருப்பர்,தொட்டிச்சி அம்மன், நண்டுதோட்டு கருப்பர், சாவக்காரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இந்த குடமுழுக்கு விழாவில் கோவனூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்க்கொண்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.