ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பணியில் மீண்டும் அழைத்து வந்த மாணவர்கள்

மயிலாடுதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி சாட்டை பட பாணியில் பள்ளிவாசலில் மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு என்னும் இடத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

மயிலாடுதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி சாட்டை பட பாணியில் பள்ளிவாசலில் மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு என்னும் இடத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு சந்திரசேகரன் என்ற ஆசிரியர் பள்ளி நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மாணவிகளை அடித்ததாக கூறி எழுந்த புகாரில் அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் நீக்கியது.

இதனையடுத்து ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன், அப்பள்ளியில் பயிலக்கூடிய 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். அப்போது பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்து பள்ளி வளாகத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மீண்டும் சந்திரசேகரனை பணியமர்த்த உத்தரவிட்டார். இதனையடுத்து வீட்டில் இருந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகத்தினர் கார் வைத்து அழைத்து வந்தனர்.

இதற்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் அடுத்த, ஆசிரியர் சந்திரசேகரன் சமுத்திரக்கனி நடித்திருந்த சாட்டை பட பாணியில் மாணவர்களை நோக்கி கையெடுத்து வணங்கி பள்ளிக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதனை கண்டு உற்சாக குரல் எழுப்பிய மாணவ மாணவிகள் ஆசிரியரின் காலை தொட்டு வணங்கியபடி, அவரை கண்ணீர் மல்க மீண்டும் வகுப்பறைக்கு அழைத்துச் சென்ற நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.