தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,74,233 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 35,734 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,487 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 26,21,986 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 16,513 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 145, செங்கல்பட்டில் 107 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவானோரே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.







