தமிழ்நாட்டில் புதிதாக 4,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட் டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 952 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 18 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் புதிதாக 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 446 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஈரோட்டில் 395 பேருக்கும் சேலத்தில் 268 பேருக்கும் கோவையில் 486 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 20 பேருக்கும் தென்காசியில் 26 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







