முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் 1,608 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,608 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 33 ஆயிரத்து 839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 512 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 82 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 197 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 194 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 221 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 113 பேருக்கும் ஈரோட்டில் 160 பேருக்கும் தஞ்சாவூரில் 115 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!

Web Editor

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது

Web Editor

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் ஆசிய ஹாக்கி போட்டி – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

Web Editor