தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்!

தமிழ்நாட்டில் தற்போது வெயில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அவ்வப்போது, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய முனைவர் புவியரசன் வெளியிட்ட செய்திக்…

தமிழ்நாட்டில் தற்போது வெயில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அவ்வப்போது, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய முனைவர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 27ஆம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.