காசிமேடில் முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை…!

சென்னை காசிமேடு பவர்குப்பத்தில் முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை காசிமேடு அருகே உள்ள பவர் குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்ராமன்…

சென்னை காசிமேடு பவர்குப்பத்தில் முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை காசிமேடு அருகே உள்ள பவர் குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்ராமன் (28). இந்நிலையில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த விமல் மற்றும் அவரது நண்பர்கள் என 5 பேர் கொண்ட கும்பல் வெங்கட்ராமனை சரமாரியாக வெட்டி விட்டு தலைமறைவாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள் ; “தமிழை வைத்து வியாபாரம் செய்கின்றனர்..!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

இதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டு இருந்த வெங்கட்ராமனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். வெங்கட்ராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

இச்சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், உயிரிழந்த வெங்கட்ராமன் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல ரவுடி வெங்கட்ராமன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.