முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி – சென்னையில் இன்று தொடக்கம்

சென்னையில் தமிழ்நாட்டின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பங்கேற்றனர். சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும், இலவசமாக பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் தமிழில் உள்ள சிறந்த படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்-ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

Web Editor

மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!

G SaravanaKumar

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பிக்கள் குழு இன்று டெல்லி பயணம்! மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் மனு அளிக்கின்றனர்!

Web Editor