முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு – கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் பிரபல ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர், இந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை தமிழ்நாடு அணி 5 முறை விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர், இத்தொடரில் கோப்பையை வெல்லாத தமிழ்நாடு அணி, கடந்த ஆண்டு காலிறுதி வரை முன்னேறி வெளியேறியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன், ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர், இந்திரஜித், சாய் கிஷோர், எம்.சித்தார்த், சி.வி.வருண், குல்தீப் ரம்பல் சென், சந்தீப் வாரியர், நடராஜன், ஷாருக் கான், சோனு யாதவ், அபராஜித், விமல் குமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த தொடர் நடைபெறும் சமயத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க உள்ளதால், அவருக்கு பதில் தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு! சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன்!

Web Editor

வத்தலக்குண்டு ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகக்குழு தேர்தல்

Syedibrahim

குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading