தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,971 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 37 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 558 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 76 ஆயிரத்து 339 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 147 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 122 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். 3 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் 209 பேருக்கும் செங்கல்பட்டில் 116 பேருக்கும் ஈரோட்டில் 122 பேருக்கும் சேலத்தில் 136 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக பெரம்பலூரில் 7 பேருக்கும் ராமநாதபுரம், தென்காசியில் தலா 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.








